அன்பிற்கினியவர்களே !
‘4தமிழ்மீடியா’ என்கிற எமது ஊடக தவத்தை பொறுப்புணர்வு என்ற அடிப்படையோடு ஆரம்பித்து, பன்னிரெண்டாவது ஆண்டில் பயணிக்கின்றோம். சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது.
எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .
ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.
4தமிழ்மீடியாவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது குறித்து, அவ்வப்போது உங்களிடம் அறிந்து, வளமாக்கி வந்திருக்கின்றோம். இப்போதும் 4தமிழ்மீடியா குறித்த உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை அறிய விரும்புகின்றோம். கீழேயுள்ள இணைப்பில் அழுத்தி, ஒரு நிமிடத்தில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து, எம்மை நெறிப்படுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
எமது வளர்ச்சிப் பயணத்தில் உடன் வரும் அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும்!
- என்றும் மாறா இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமத்தினர்
எங்கள் பணிகளுக்கு உதவ முடியுமெனில் உதவலாம்