தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) வெற்றி பெற்றிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின் எதிர்கொண்ட முதலாவது சட்டமன்றத் தேர்தலிலேயே அவர் அறுதிப் பெரும்பான்மையுள்ள வெற்றியைப் பெற்றிருக்கின்றார். இந்த வெற்றி, பத்து ஆண்டுகளாக ஆட்சி அதிகாரமின்றி எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. ஆதரவாளர்களிடையே கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
பதிவுகள்
துறைமுக நகர்: ராஜபக்ஷக்கள் வைத்த தீ! (புருஜோத்தமன் தங்கமயில்)
தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள், ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்கிற இக்கட்டான கட்டத்துக்கு வந்திருக்கின்றன. இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக்கி, நாட்டின் ஆபத்பாண்டவர்கள் ‘ராஜபக்ஷக்களே’ என்று முழங்கி, 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களை மீண்டும் ஆட்சிக் கட்டிலில், இந்தச் சக்திகள் ஏற்றின.
கருப்பையை அகற்றும் ஏழைப்பெண்கள்! கண்ணீர் பின்னணி !
மாதவிடாய் காரணமாக, தங்களால் பணியை இடையூறு இன்றி பெண்களால் செய்ய முடியவில்லை. இதனால் பணியிடங்களில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என்பதற்காகக் கருப்பையையே அகற்றி விடுவதாக அதிர்ச்சித் தகவல்கள் செய்திகளாக வெளியாக மகாராஷ்டிர மாநிலத்தின் மகளிர் ஆணையம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
என்னவாகப் போகிறார் எடப்பாடி
‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விடுதியில் அதிமுக எம்.ஏல்.ஏக்கள் அனைவரின் கடிதங்களையும் சசிகலா வாங்கிக்கொண்டபிறகு, முதலமைச்சர் பதவியை முதலில் இன்றைய தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே கொடுக்க விரும்பினாராம் சசிகலா.
விக்கி எனும் அறமற்ற அரசியல்வாதி! (புருஜோத்தமன் தங்கமயில்)
முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இளைஞர்களை திட்டமிட்டுப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள செயற்பாட்டாளர்கள் மற்றும் புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் இடம்பெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசியக் கட்சிகள் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த பட்சம் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகளைக்கூட இளைஞர்களை இணைத்துக் கொண்டு கட்சிகள் நடத்துவதற்கு பின்நிற்பது ஏன்?’ என்ற தொனியிலான கேள்விகள் முன்வைக்கப்பட்டு உரையாடப்பட்டன. குறித்த உரையாடலில் தாயகத்திலிருந்து பங்குகொண்ட ஒருவராக, எனக்கு இதற்கான பதில்களை பேச வேண்டியிருந்தது.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)
பிரித்தானியத் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட ஏழு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 388 தனி நபர்களுக்கு எதிரான தடையை இலங்கை அரசாங்கம் மீண்டும் விதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பிலான 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்ட சில நாட்களுக்குள்ளேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தனிநபர்களுக்கு எதிரான தடையை அரசாங்கம் விதித்துள்ளது.
More Articles ...
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2வது அலை தோன்றிய போது, மிக மோசமான பாதிப்புக்களைச் சந்திங்கத் தொடங்கின. தினசரி தொற்று வீதத்தின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அண்டைய நாடுகள் சில சுவிற்சர்லாந்தை ஆபத்து நாடுகளின் பட்டியலில் சேர்த்தும் கொண்டன.
தமிழகத்தின் ஆட்சியை பத்து ஆண்டுகால காத்திருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கைப்பற்றியிருக்கின்றது. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர், திமுகவின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்.
மன்னார் கத்தோலிக்க மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 01) காலமானார். இளைமைக் காலத்திலேயே தன்னை இறைபணிக்காக ஒப்புக்கொடுத்த அவர், இறைபணி என்பது அல்லற்படும் மக்களுக்கான பணியே என்பதற்கான உதாரணமாக இறுதி வரை வாழ்ந்தவர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.