விளையாட்டு

இன்று ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இவ்வருடத்துக்கான ஐசிசி உலகக் கிண்ணக் கோப்பைப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்றிருந்த நிலையில் சூப்பர் ஓவர் வழங்கப் பட்டு அதிலும் இரு அணிகளும் சம ரன்களைப் பெற்ற நிலையில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியான இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது.

இதனால் முதன் முறையாக அதுவும் தனது தாயகத்தில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை சுவீகரித்து சரித்திரம் படைத்துள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி லோர்ட்ஸ் மைதானம் பந்து வீச்சுக்கான மைதானம் என்பதால் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 241 ரன்களை நியூசிலாந்து அணி குவித்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களைப் பெற்றார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே மிக மெதுவாக ரன்களைக் குவித்து வந்தது. ஆனாலும் கடைசி ஒவரில் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 241 ரன்களைப் பெற்று ஆட்டத்தை சமநிலைப் படுத்தியது. பேட்டிங்கில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களைப் பெற்றார்.

சூப்பர் ஓவரில் இரு அணிகளும் 15 ரன்களைப் பெற்று அதுவும் சமநிலையிலேயே முடிந்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக பவுண்டரிகள் அடித்த அணியாகக் கணிக்கப் பட்ட இங்கிலாந்து அணி சேம்பியனானது. ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விருது வழங்கப் பட்டார். மிகவும் விறுவிறுப்பான போட்டியாகக் கணிக்கப் பட்ட இந்த இறுதிப் போட்டியில் ஒரு ரன்னால் தோல்வியுற்ற நியூசிலாந்து அணியினர் ஏமாற்றத்துடன் தாயகம் திரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.