விளையாட்டு

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகின்றது. பிரித்தானியாவின் இலண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. 

சர்வதேச கிரிக்கெட் பேரவை சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த 11 உலகக் கோப்பை போட்டிகளில் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

1975, 1979ஆம் ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகளும், 1983ஆம் ஆண்டு இந்தியாவும், 1987ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவும், 1992ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 1996ஆம் ஆண்டு இலங்கையும், 1999, 2003, 2007ஆம் ஆண்டுகள் தொடர்ச்சியாக அஸ்திரேலியாவும், 2011ஆம் ஆண்டு இந்தியாவும், 2015ஆம் ஆண்டு மறுபடியும் அவுஸ்திரேலியாவும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இது வரை ஒருமுறை கூட உலக கிண்ணத்தை வெல்லவில்லை. அதே போல் வலுவான அணிகளான நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்டவை முதன் முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளன.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியை ஏற்கெனவே 4 முறை நடத்தியுள்ள இங்கிலாந்து தற்போது 2019இல் 5ஆவது முறையாக நடத்துகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மொத்தம் 11 மைதானங்களில் ஆட்டங்கள் நடக்கின்றன.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.