விளையாட்டு

இந்தியாவில் 12 ஆவது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஃப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் உம் மும்பை இந்தியன்ஸும் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. 132 என்ற எளிமையான இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி 18.3 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் ஒன்றினை சென்னை வீரர் முரளி விஜய் பிடிக்கத் தவறியமை என்பது கூறப்படுகின்றது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சூர்யகுமார் 54 பந்துகளில் 71 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

நாளை புதன்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 2 ஆவது தகுதிச் சுற்று ஆட்டத்துக்காக மோதுகின்றன.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.