விளையாட்டு

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காலநிலை சீர்கேட்டினால் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே கைப்பற்றியிருந்த இந்திய அணி, 71 வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் போட்டித் தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது.

"2011 இல் இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம்பெற்ற மிக இளைமையான வீரர் நானே. அப்போது அந்த வெற்றியின் மகத்துவம் எப்படிப்பட்டது என பெரிதாக தெரிந்திருக்கவில்லை. இப்போது இவ்வளவு கடின உழைப்புக்கு பிறகு பெற்ற இவ்வெற்றியின் மகத்துவம் உண்மையிலேயே மகிழ்ச்சியை தருகிறது" என இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். 

சட்டீஸ்வர் புஜாராவின் சதங்கள், ரிஷாப் பேண்டின் அதிரடி ஆட்டம், பும்ராஹ், ஜடேஜா மற்றும் குல்தீப் யாதீவ் ஆகியோரின் அதிரடி பந்துவீச்சு இந்தியாவின் இத்தொடர் வெற்றிக்கு காரணமானது. "கடந்த 12 மாதங்களாக மேற்கொண்டு வந்த தயார்படுத்தல் இது. தென் ஆபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியிலிருந்து நாம் இத்தொடருக்காக தயார்படுத்தல் மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு தவறுகளையும் இணங்கண்டு, களைந்து, சரியான ஃபோர்முலாவை கண்டுபிடித்து, சரியான வீரர்களை சரியான வீரர்களுடன் இணைத்து இத்தயார்படுத்தலை மேற்கொண்டிருந்தோம்" என இந்திய அணியின் பயிற்றுனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் இனி நடைபெறவுள்ளன. 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.