விளையாட்டு

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, ரிஷாப் பாண்ட் சதங்களினால் 622 ஓட்டங்களை இந்தியா குவித்திருந்தது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது ஆஸ்திரேலியா அணி. இந்திய ஓட்ட எண்ணிக்கையை கடப்பதற்கு இன்னமும் 322 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஃபலோ வன் முறையில் துடுப்பெடுத்துமாறு இந்தியா பணித்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 6 ஓட்டங்களுக்கு எந்தவித விக்கெட் இழப்புமின்றி களத்தில் நிற்கிறது.

நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் காலநிலை சீர்கேட்டால் பெருவாரியான போட்டி ஒத்திவைக்கப்பட்டு தாமதமாகவே தொடங்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே செல்கிறது.

எனினும் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், சமநிலைப்படுத்தினாலும் போட்டித் தொடரை கைப்பற்றி, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பெற்றுக் கொண்ட முதல் டெஸ்ட் தொடர் வெற்றி எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தும்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.