விளையாட்டு

நேற்று நடைபெற்ற உலக கோப்பை கால் பந்து போட்டிகளில் ஆர்ஜெண்டீனா - ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 1-1 என சம நிலை கோல்களில் முடிந்திருக்கிறது. ஆர்ஜெண்டீனா சார்பில் செர்ஜியோ 19 வது நிமிடத்தில் ஒரு கோல் ஒன்றை அடித்தார். 23 வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் அல்ஃபிரோ தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.

1990ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஆர்ஜெண்டீனா அணி, உலக கோப்பை முதல் போட்டியில் வெல்லத் தவறியிருக்கிறது. ஐஸ்லாந்தின் முதல் உலக கோப்பை போட்டி இது. இப்போட்டியை சமநிலைப்படுத்தியது, அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

மெஸ்ஸிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றை ஐஸ்லாந்து கோல் கீப்பர் மிகத் துல்லியமாக கணித்து தடுத்து நிறுத்தினார். நேற்று பிரான்ஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் 2-1 என பிரான்ஸ் வெற்றி பெற்றது.

பெரு - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டென்மார்க் அணி 0-1 என வெற்றி பெற்றது. பெரு கடும் முயற்சி செய்தும், அவர்களுகு கிடைத்த பெனால்டி வாய்ப்பை சரியாக பயன்படுத்தாததால் தோல்வியை தழுவியது.

குரோஷியா - நைஜீரிய அணிகளுக்கு இடையிலான மற்றூமொரு போட்டியில் குரோஷிய அணி 2-0 என வெற்றி பெற்ற்து. இன்று கொஸ்டா ரிக்கா - செர்பிய அணிகளுக்கு இடையில் ஒரு போட்டியும், ஜேர்மனி - மெக்ஸிகோ அணிகளுக்கு இடையில் மற்றுமொரு போட்டியும், பிரேசில் - சுவிற்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறுகின்றன.

இன்றைய போட்டிகளில் மூன்று தென்/மத்திய அமெரிக்க நாடுகளுடன் மூன்று ஐரோப்பிய அணிகள் மோதுகின்றன.

கடந்த உலக கோப்பை தொடரில், ஜேர்மனியிடன் 7-1 என தோற்று வெளியேறிய பிரேசில் அணி, இம்முறை அதற்கு பழி தீர்க்குமா எனும் கேள்வி எழுகிறது. மறுமுனையில் ஃபிஃபா தர வரிசையில் 6 வது நிலையில் இருக்கும் சுவிற்சர்லாந்து அணியும், பிரேசிலுக்கு மிகச் சவாலான அணியாக திகழும்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.