திரைச்செய்திகள்

அம்மாவை கண்டதும் ஸ்கூல் பிள்ளைகள் வாசலிலேயே ஓ வென்று அழுமே... அப்படி அழ ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

ரஜினி வரவுக்காகவே காத்திருந்தவர்கள், தலைவா... இப்படி அநியாயம் நடந்திருச்சே. அதை கேட்க மாட்டியா என்கிற பொருள்படும்படி ஆங்காங்கே போஸ்டர் அடித்து அமர்க்களப்படுத்திவிட்டார்கள். ஒரே ஒரு பிரச்சனைதான் எல்லாவற்றுக்கும் காரணம். ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் யாருக்கும் வழங்கப்படவில்லை. முதல் மூன்று நாட்களும் ஐடி பார்க் ஊழியர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டுவிட்டது. சென்னை காசி தியேட்டரில் வானுயர பேனர் வைத்த ரசிகர்கள், தங்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதும் அந்த பேனரையே அவிழ்த்துக் கொண்டு போன அவலமும் நடந்தது. “எங்களுக்கே டிக்கெட் இல்ல. அப்புறம் எங்க பேனர் மட்டும் வேணுமா, போய்யா...

தலைவர் ஊர்ல இருந்து வந்ததும் பேசிக்கிறோம்” என்று கலைந்தார்கள். சொன்னபடியே ரஜினி சென்னை திரும்பியதும், நாங்க ஏமாற்றப்பட்டோம் தலைவா. நியாயத்தை நீ கேளு என்று போஸ்டர் அடித்து போயஸ் கார்டன் ஏரியாவில் ஒட்டிவிட்டார்கள். ரஜினி பார்க்கணுமே? பார்த்தாலும், பிரச்சனையை தட்டிக் கேட்கணுமே? இந்த நேரத்தில்தான் அந்த இனிய தகவல். கபாலி பார்ட் 2 தயாரிக்கிற பாக்கியம் கிடைத்தால் மகிழ்வேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

Rajinikanths Kabali Success Press Meet Photos

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.