திரைச்செய்திகள்

30 ஆண்டுகளைக் கடந்து ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வந்துகொண்டிருப்பவர் அதிரடி நாயகன் டாம் குரூஸ்,

இவரது நடிப்பில் வெளியான ஜெர்ரி மாக்வேர்’, ‘மெக்னோலியா’, ‘பார்ன் ஆன் த போர்த் ஜூலை’ ஆகிய படங்களில் குரூஸின் அசத்தலான நடிப்புக்காக அடுத்தடுத்து மூன்றுமுறை கோல்டன் குளோப் விருதுகளை பெற்றிருந்தார். அவற்றை குரூஸ், விருது அமைப்புக்கு திரும்ப அனுப்பிவிட்டதாக ஹாலிவுட்டின் புகழபெற்ற பொழுதுபோக்குச் செய்தி இணையதளமான வெரைட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

அகில உலக வணிக சினிமா சந்தையில் வெளியாகும் படங்களுக்கான விருதுகளில், ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக கோல்டன் குளோப் விருதுகள் பேசப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், சிறந்த திரைப்படங்களுக்கு வருடம்தோறும் ஹாலிவுட்டின் ஃபாரின் பிரெஸ் அசோசியேஷன் எனும் அமைப்பே கோல்டன் குளோப் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த அமைப்பில் 90 பேர் ஜூரி உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 20 வருடங்களாக இந்த அமைப்பில் கறுப்பினத்தவர் யாரும் உறுப்பினர்களாக இல்லை, வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உறுப்பினர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் எனும் குற்றச்சாட்டுகள் எழுந்து தற்போது சர்சையாகியிருக்கிறது.

இதைத்தொடர்ந்து கோல்டன் குளோப் விருது அமைப்புக்கு எதிராக நடிகர், நடிகைகள் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் டாம் குரூஸ் 1989, 1996, 1999 ஆகிய ஆண்டுகளில் தான் பெற்ற கோல்டன் குளோப் விருதுகளை திருப்பி அனுப்பியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இதையடுத்து விரைவில் விருது குழுவில் கறுப்பினத்தவர்கள் சேர்க்கப்படுவர் என தற்போது அமெரிக்க நாளிதழ்கள் இன்று செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.