திரைச்செய்திகள்

சன் டிவி தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவருடைய 65-வது படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி

பின்னர் ஜார்ஜியாவில் 8 நாள்கள் நடந்து முடிந்தது. கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் முற்றாக குறைந்தவுடன், சென்னையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடத்தலாம் அதுவரை பொறுமை காப்போம் என்ற விஜய்யின் கோரிக்கையை தயாரிப்புத் தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து மற்ற துணை கதாபாத்திரங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வது உட்பட படத்தின் மற்ற பணிகளை முடிக்க இயக்குநர் நெல்சன் தீவிரம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக சன் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து தற்போது இந்தப் படத்தின் இரண்டு முக்கிய வில்லன்களில் ஒருவராக பிரபல இயக்குநர் செல்வராகவன் நடிக்கவிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை இயக்குநர் வட்டாரத்திலிருந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லையென்றாலும் தன்னிடம் நெல்சன் கதையையும் கதாபாத்திரத்தையும் கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செல்வராகவன் தரப்பிலிருந்தும் தகவல் கசிகிறது. கீர்த்தி சுரேஷுடன் இணைந்து 'சாணிக் காயிதம்' என்ற படத்தில் செல்வராகவன் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.