திரைச்செய்திகள்

தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியின் தோழி டாக்டர் சுபாஷினியாக நடித்திருந்த தமன்னாவை தமிழ் ரசிகர்கள் மறக்கவிரும்பவில்லை. அந்தப் படத்தில் அவ்வளவு எதார்த்தமாக நடித்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

அதன்பிறகு ‘குயின்’ இந்திப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து முடித்திருந்தார் விரைவில் அது ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் தற்போது தமன்னா கதையின் நாயகியாக நடித்துள்ள புதிய தமிழ் க்ரைம் த்ரில்லர் இணையத் தொடர் ஒன்றினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் மே 20-ஆம் தேதி தனது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. ‘நவம்பர் ஸ்டோரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடரில் கொடூரமான ஒரு கொலையின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிப்படுகின்றனவாம். கிட்டத்திட்ட தமன்னா முதல் முறையாக வில்லியாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

ராம் சுப்பிரமணியன் இயக்கியிருக்கும் இந்தத் தொடரின் கதைச் சுருக்கும் இதுதான்: அனுராதா (தமன்னா) ஒரு இளம் அறம் சார் இணையவழி ஹேக்கர், அவரது அப்பா கணேசன் (ஜி.எம்.குமார்) கட்டிய வீட்டை விற்கிறார். ஆனால், வீட்டை ஒப்படைக்க கால அவகாசம் கேட்கிறார். வீட்டை விற்றால்தான் அப்பாவின் அல்சைமர் நோய் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியும் என்கிற நிலை. ஆனால், ஒரே இரவில், அவர்களின் வாழ்க்கை ஒரு கொலையால் புரட்டிப்போடப்படுகிறது. வெளியே போய்விட்டு விற்ற வீட்டுக்கு வரும் அனுராதா, தன் வீட்டில் ஒரு பெண் இறந்து கிடக்க, அந்த உடலுக்கு அருகில் தனது அப்பா கணேசனைக் காண்கிறார்.

அவர் ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர், அனைத்து ஆதாரங்களும் கணேசனை குற்றவாளியாகக் காட்டுக்கின்றன. அந்த கொலையின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டுபிடிக்க அனுராதா தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொள்ளும்போது அதிர்ச்சியூட்டும் சங்கிலித் தொடர் திருப்பங்கள் வெளிப்படுகின்றன. கொலையான அந்தப் பெண் யார், கணேசன் இந்த கொடூரமான குற்றத்தை செய்திருப்பாரா? அப்பா கொலை செய்திருக்கமுடியாது என்பதை, மகள் அனுராதாவால் நிரூபிக்க முடிந்ததா என்பதுதான் கதை. மொத்த 7 எபிசோட்கள்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.