திரைச்செய்திகள்

ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது சக மனிதனுடைய சுயமரியாதை மட்டுமே ‘சலுகை’யை அல்ல என்கிற கருத்துடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியானது ‘கர்ணன்’.

தனுஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு, நட்ராஜ், பூ ராம் எனப் பிரபல நடிகர்கள் குவிந்திருந்த இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பு மற்றும் எதிர்ப்புக்கு ஏற்ப வசூல் கிடைக்கவில்லை. படம் நஷ்டத்தையே சந்துள்ளது என தற்போது விநியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

என்றாலும் படம் உருவாக்கிய நல்லெண்ணத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது. இதை தனுஷ் தனது சமூக வலைப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அவர் தன்னுடைய பதிவில்: ‘கர்ணன் படத்தின் ‘மாபெரும்’ வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்’ என்று தெரிவித்துள்ளார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். இதன்பிறகே இந்தக் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கும்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு கதாநாயகனாக அறிமுகமான 'சித்து +2' படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார் தமிழ்ப் பெண்ணான சாந்தினி தமிழரன். 'வில் அம்பு' படத்தில் தள்ளூவண்டியில் ரோட்டர இட்லிக்கடை நடத்தும் பெண்ணாக நடித்து சிறந்த நடிகை எனப் பெயர்பெற்றார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படலையைத் திறந்தபடி அவர்கள் வந்தார்கள்…..
முற்றத்தில் கிடந்த வைரவன் மெல்ல தலைதூக்கிப் பார்த்தபின் மெல்ல எழுந்து வேலனுக்குப் பக்கமாகச் சென்றது.

கடந்த தொடரில் Starshot விண்வெளிப் பயண செயற்திட்டம் தொடர்பான விரிவான தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..

முந்தைய தொடருக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! : பாகம் -10 (We are Not Alone - Part 10)

யுவன் சங்கர் ராஜாவும் இசைப்புயல் ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீனும் இணைந்து இறைத்தூதர் முகம்மது நபிகளை (Pbuh) புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் கவினின் புதிய திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.